அமலா பாலுக்கு தொல்லை கொடுத்த முன்னாள் காதலர் கைது! நெருக்கமாக இருந்த போட்டோ லீக் செய்வதாக மிரட்டல்
தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை அமலா பால் அளித்த புகாரின் அடிப்படையில் அவரது முன்னாள் காதலர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அமலா பால்
நடிகை அமலா பால் மைனா படத்தில் அறிமுகமாகி அதன் பின் தமிழ் சினிமாவில் பல முக்கிய படங்களில் நடித்து பாப்புலர் ஆனவர். அவர் இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து 2014ல் திருமணம் செய்துகொண்ட நிலையில் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார்.
இரண்டாம் திருமணம்?
அதன் பின் அவர் ஜெய்ப்பூரை சேர்ந்த பவீந்தர் சிங் என்பவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியானது. அவர்கள் திருமணம் செய்துகொண்டதாக தகவல் பரவிய நிலையில், அது உண்மை இல்லை.. போட்டோஷூட் தான் என விளக்கம் கொடுத்தார் அமலா பால்.
அப்போது இன்ஸ்டாகிராமில் போட்டோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய பவீந்தர் சிங் மீது தான் அமலா பால் தற்போது பாலியல் புகார் அளித்து இருக்கிறார்.
பாலியல் தொல்லை - கைது
விழுப்புரம் அருகில் இருக்கும் ஆரோவில் பகுதியில் அமலா பாலுக்கு சொந்தமான வீட்டில் பவீந்தர் சிங் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் லீக் செய்துவிடுவேன் என அவர் மிரட்டுகிறார் என்றும் புகாரில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
அமலா பால் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் பவீந்தர் சிங்கை ராஜஸ்தானில் கைது செய்து இருக்கின்றனர்.
லோ பட்ஜெட் பீஸ்ட் படமா.. பாரதி கண்ணம்மாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்