சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான சிறந்த பாடல்கள் - ஒரு சிறப்பு தொகுப்பு, இதோ

By Kathick May 31, 2023 12:00 PM GMT
Report

சந்தோஷ் நாராயணன்

தமிழ் திரைத்துறையில் இசையமைப்பாளர் மட்டும் பாடகராக வலம் வருபவர் தான் சந்தோஷ் நாராயணன். இவர் சில தெலுங்கு, மலையாளம் திரைப்படங்களிலும்.

இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, இசை ஜாம்பவான் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவி இசையமைப்பாளராக பணியாற்றினார். பின் பிரபல பாடகியான மஹாலக்ஷ்மி ஐயரை திருமணம் செய்து கொண்டார்.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான சிறந்த பாடல்கள் - ஒரு சிறப்பு தொகுப்பு, இதோ | Best Santhosh Narayanan Songs In Tamil

சந்தோஷ் நாராயணன், ரெக்கார்டிங் இன்ஜினியராக திரைப் பயணத்தை தொடங்கி பின் தயாரிப்பாளர் சி.வி.குமார் உதவியால் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான "அட்டகத்தி" திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார்.

இந்த படத்திற்காக சிறந்த அறிமுக இசை அமைப்பாளருக்கான ஜெயா டிவி 2012 விருது இவருக்கு வழங்கப்பட்டது.

சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான சிறந்த பாடல்கள் - ஒரு சிறப்பு தொகுப்பு, இதோ | Best Santhosh Narayanan Songs In Tamil

சிறந்த பாடல்கள் : 

அட்டகத்தி :

பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012ல் வெளிவந்த நகைச்சுவை திரைப்படம் தான் "அட்டகத்தி". இதில் தினேஷ், நந்திதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடித்திருந்தனர். படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன் "ஆடி போனா ஆவணி" எனும் கானா பாடல் மற்றும் "ஆசை ஒரு புல்வெளி" எனும் மெலடி பாடலுக்கும் இசையமைத்து தான் அணைத்து ஏரியாவிலும் புலி என்பதை முதல் படத்திலேயே நிருபித்துள்ளார்.

பீட்சா :

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த திகில் திரைப்படம் பீட்சா. இப்படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன், நரேன் மற்றும் பலர் நடித்திருந்தனர். படத்தில் சந்தோஷ் நாராயணன் பின்னணி இசையமைத்துள்ளார். பீட்சா படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று சந்தோஷ் நாராயணனின் இசையாகும். குறிப்பாக 'மோகத்திரை' பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

குக்கூ :

2014ம் ஆண்டு இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படம் குக்கூ. இதில் தினேஷ், மாளவிகா நாயர் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சகர்களால் மிகவும் பாராட்டப்பட்டது. இப்படத்தில் சந்தோஷ் இசையமைத்துள்ள "மனசுல சூரக் காத்தே", "ஆகாசத்த" போன்ற மெல்லிசை பாடல்கள் ரசிகர்களை கவர்ந்தது.

ஜிகர்தண்டா :

ஜிகர்தண்டா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 2014ம் ஆண்டு வெளிவந்தது. இதில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்திற்காக சந்தோஷ் நாராயணன் மின்னணு இசைக்கருவிகளை பயன்படுத்தியுள்ளார். இவரை பாராட்டி பிரபல நாளிதழ் ஒன்று - " சந்தோஷ் நாராயணன் கம் பேக் கொடுத்துள்ளார், அவர் கவனிக்க வேண்டிய இசையமைப்பாளர்களில் ஒருவர்" என தெரிவித்திருந்தது. இப்படத்தில் இடம்பெற்ற 'பாண்டி நாட்டு கொடியின் மேல' ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

மெட்ராஸ் :

2014ம் ஆண்டு பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் "மெட்ராஸ்". இதில் கதாநாயகனாக கார்த்திக், கதாநாயகியாக காத்ரீன் திரீசா நடித்துள்ளனர். இப்படத்தில் "ஆகாயம் தீ பிடிச்சா நிலா தாங்குமா" எனும் பாடல் மூலம் ஒரு ஆகாய காதலை இசைத்திருந்தார் சந்தோஷ் நாராயணன்.

இறுதி சுற்று :

2016ல் சுதா கொங்கரா இயக்கத்தில் தமிழ், இந்தி என இரு மொழிகளிலும் திரைக்கு வந்த படம் "இறுதி சுற்று". இப்படம் குத்து சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். இதில் மாதவன், ரித்திகா சிங் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் "ஏ சண்ட காரா… " எனும் பாடல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான விருது வழங்கப்பட்டது.

கபாலி : 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் 2016ம் ஆண்டு திரைக்கு வந்த படம் கபாலி. இதில் ராதிகா ஆப்தே, கிஷோர் குமார், தாய்வான் நடிகர் வின்சுடன் சாவோ, தன்ஷிகா, அட்டகத்தி தினேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைத்த சந்தோஷ் "நெருப்புடா" பாடலினால் உலகளவில் உள்ள ரசிகர்களின் மனதில் தீப்பற்ற வைத்து பின் "மாயநதி" பாடல் மூலம் ரசிகர்களை உருக வைத்தார்.

வடசென்னை :

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்த படம் வடசென்னை. இதில் சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ், அமீர், ஆண்ட்ரியா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்திருந்த சந்தோஷ் நாராயணன் பாராட்டுகளை அள்ளினார். குறிப்பாக 'என்னடி மாயாவி நீ' பாடல் மிகவும் அருமையாக இருந்தது. ரசிகர்களையும் அதிகம் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பரியேறும் பெருமாள் :

2018ல் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் "பரியேறும் பெருமாள்". இதில் கதிர், ஆனந்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் "கருப்பி" பாடல் மூலம் மக்கள் மனதை கரைய வைத்தார் சந்தோஷ் நாராயணன்.

கர்ணன் :

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2021ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் திரைக்கு வந்த படம் "கர்ணன்". இதில் யோகி பாபு, லால், நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் சந்தோஷ் இசையமைப்பில் உருவான "கண்டா வரச்சொல்லுங்க..கர்ணனை கையோடு கூட்டி வாருங்க" என்ற பாடல் அனைவரையும் சிலிர்க்க வைத்து விட்டது.

சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் விஜய்க்கு மிகவும் பிடித்த பாடல் எது தெரியுமா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US