மீண்டும் மலையாள திரையுலகில் நடிக்கவரும் நடிகை பாவனா..
நடிகை பாவனா
நடிகை பாவனா தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக விளங்கியவர். இவர் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான தீபாவளி, வெயில், கூடல் நகர் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகியது.

மேலும் இவர் கடைசியாக தமிழில் தல அஜித்துடன் அசல் திரைப்படத்தில் நடித்திருந்தார், பின்னர் மீண்டும் அவர் மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
மீண்டும் மலையாளத்தில்

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடித்து வரும் பாவனா, ஒரு சில கன்னட திரைப்படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.
இந்நிலையில், 5 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார் பாவனா. படத்திற்கு 'என்திக்காக்காகொரு பிரேமந்தார்னு' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
பிரபலங்கள் அணியும் ரூ.23,000 மதிப்புள்ள டீ-ஷர்ட் ! அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?