வந்தியதேவனாக விஜய் நடிக்கவிருந்தது குறித்து முதல் முறையாக பேசிய சீயான் விக்ரம் !
பொன்னியின் செல்வன்
தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.
நாளை பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள இப்படத்தை ஒட்டுமொத்த ரசிகர்களும் எதிர்பார்த்து காத்து கொண்டு இருக்கின்றனர்.
இந்தியளவில் பல இடங்களுக்கு சென்று இப்படத்தை ப்ரோமோஷன் செய்த நட்சத்திரங்கள் இன்றும் சென்னையில் இப்படத்தின் ப்ரோமோஷனை தொடர்ந்து வருகின்றனர்.

விஜய்
இந்நிலையில் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியொன்றில் சீயான் விக்ரம் விஜய் பொன்னியின் செல்வனில் நடிக்கவிருந்தது குறித்து பேசியிருக்கிறார்.
அதன்படி அவர் பேசியபோது கார்த்தி தற்போது நடித்துள்ள வந்தியதேவன் கதாபாத்திரத்தில் முதல் நடிக்கவிருந்தது விஜய், ஜெயம் ரவி நடித்த அருண்மொழி கதாபாத்திரத்தில் மகேஷ் பாபு நடிக்க வேண்டியது.
மேலும் அப்போதும் அதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிக்க முடிவு செய்யப்பட்டது நான் தான் என பேசியிருக்கிறார் சீயான் விக்ரம்.

நானே வருவேன் திரைவிமர்சனம்