எம்.ஜி.ஆர், கமல், விஜய் என மூன்று முக்கிய நடிகர்களும் தவறவிட்ட பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய கதாபாத்திரம் !
பொன்னியின் செல்வன்
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் இணைந்து நடித்துள்ள பிரம்மாண்ட வரலாற்று திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தின் முதல் பாகமான PS-1 வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது, இதற்கான ப்ரோமோஷனில் இறங்கியுள்ள படக்குழு படத்தின் டீசரை நாளை வெளியிடவுள்ளது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் நாவலை தமிழ் சினிமா பல்வேறு காலகட்டங்களில் உருவாக்க பல முக்கிய பிரபலங்களும் முயற்சித்துள்ளனர். ஆனால் தற்போது தான் அது இயக்குநர் மணிரத்னம் அவர்களால் சாத்தியம் ஆகியுள்ளது.
மேலும் இந்த பொன்னியின் செல்வன் நாவலில் முக்கிய பிரபலங்கள் நடிக்கவிரும்பிய கதாபாத்திரம் வல்லவரையன் வந்தியத்தேவன். தற்போது உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் நடிகர் கார்த்திக்கு வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
டாப் நடிகர்கள் விரும்பிய கதாபாத்திரம்
ஆனால் இதற்கு முன் இந்த கதாபாத்திரத்தில் நடிகர் எம்.ஜி.ஆர் உருவாக்க நினைத்த பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க விரும்பியுள்ளார். மேலும் நடிகர் கமல்ஹாசன் உருவாக்கவிருந்த பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனாக நடிக்க விரும்பியுள்ளார்.
அதுமட்டுமின்றி மணிரத்னம் இயக்கத்தில் விஜய் மற்றும் மகேஷ் பாபு நடிக்கவிருந்த படத்திலும் வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் தான் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.