இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன்.. 'சின்னத்தம்பி' நடிகர் பிரஜின் சொன்ன காரணம்! சின்னத்திரை ரசிகர்கள் ஷாக்
சீரியல்களில் நடித்து அதிகம் பாப்புலர் ஆனவர் ப்ரஜின். அவர் அன்புடன் குஷி சீரியலில் கடைசியாக நடித்து இருக்கிறது.
பிரஜின்
சன் டிவி மற்றும் அதை தொடர்ந்து விஜய் டிவி சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் மிகப்பெரிய அளவில் பாப்புலர் ஆனவர் ப்ரஜின். அவரது சின்னத்தம்பி சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆனது.
5 வருடங்களுக்கு முன்பு 2017ல் தொடங்கிய அந்த சீரியல் 2019ல் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து அன்புடன் குஷி சீரியலில் அவர் நடித்து இருக்கிறார். அதன் பின் பிரஜின் நடித்த வைதேகி காத்திருந்தால் தொடரில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். சில நாட்களில் சீரியலும் முடிக்கப்பட்டது.
இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன்
இந்நிலையில் தற்போது லைவ் வீடியோவில் பேசிய பிரஜின் தான் இனி சீரியல்களில் நடிக்க மாட்டேன் என கூறி இருக்கிறார். அவர் தற்போது 7 படங்கள் கைவசம் வைத்து இருக்கிறாராம், அதனால் இனி சினிமாவில் மட்டுமே நடிப்பேன், சீரியல்களுக்கு மீண்டும் வரும் திட்டம் இல்லை என கூறி இருக்கிறார்.
மேலும் அவரது மனைவி சாண்ட்ராவும் இப்போது இரட்டை குழந்தைகளை கவனிப்பதில் தான் பிசியாக இருக்கிறார். அதனால் அவரும் தற்போதைக்கு சீரியல்களில் ரீ என்ட்ரி கொடுக்க வாய்ப்பில்லை என கூறி இருக்கிறார் அவர்.
அஜித்-விஜய் முதன்முறையாக எப்போது, எப்படி சந்தித்தார்கள் தெரியுமா?- இதுவரை யாருக்கும் தெரியாத தகவல்