3 பெக் சரக்க விட இந்த போதை தான் அதிகமா இருக்கு.. நடிகர் ரஜினி இப்படி பேசினாரா
ரஜினிகாந்த்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகிறது.
ரஜினியின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர்களில் ஒருவர் பி.வாசு.
இப்படி பேசினாரா
இவர் ஒரு முறை ரஜினியை சந்தித்தபோது நாயகன் போல் நீங்க ஒரு படம் பண்ணனும். இதுவரை நீங்க அப்படி ஒரு படம் பண்ணல சார் என்று ரஜினியிடம் கூறினாராம் பி. வாசு.
அதற்கு ரஜினி, நாயகன் படத்தை பார்த்துவிட்டு வீட்டிற்கு வந்தபிறகு 3 பெக் சரக்கு அடித்தாராம்.
அப்போது கமலுக்கு Call செய்து ' 3 பெக் சரக்க தந்த போதைய விட வேலுநாயகன் போதை அதிகமா இருக்கு ' என்று கமலிடம் கூறினாராம் ரஜினிகாந்த். இந்த விஷயத்தை இயக்குனர் பி.வாசு பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.