நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரும் தங்களின் திருமணத்திற்கு முன் எடுத்த முடிவு!
காத்து வாக்குல ரெண்டு காதல்
தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக திகழ்ந்து வருபவர்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.
நானும் ரவுடி தான் திரைப்படத்தில் இருந்து காதலிக்க தொடங்கிய இவர்கள் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா என மூவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.

ஹிட் படத்திற்கு பிறகே திருமணம்
பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவுள்ளது. மேலும் இப்படத்தின் ப்ரோமோஷனுக்காக விஜய் சேதுபதி மற்றும் விக்னேஷ் சிவன் பேட்டியளித்து வந்துள்ளனர்.
அப்போது விக்னேஷ் சிவன் சுவாரஸ்யமான விஷயத்தை கூறியுள்ளார். ஆம், நானும் ரவுடி தான் படத்திற்கு பிறகு ஒரு நல்ல திரைப்படத்தை கொடுத்த பிறகே தாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம்.
ஆனால் அதற்கு பல வருடங்கள் ஆகிவிட்டது, தானா சேர்ந்த கூட்டம், கோவிட் உள்ளிட்ட விஷயங்களால் படத்தை இயக்கமுடியாமல் போனதாக விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.

நடிகை சங்கீதாவின் மகள் இவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டாரே ! ரீ-சென்ட் புகைப்படம் இதோ..