நடிகர் நாகேஷை கொல்ல நினைத்த கமல் - ஏன் தெரியுமா?
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் முக்கியமான நடிகர் நாகேஷ். இவர் தனது விடாமுயற்சி மட்டும் கடின உழைப்பால் திரைத்துறையின் உச்சத்திற்கு சென்றவர்.
இவர் இயக்குனர் பாலசந்தர் "சர்வர் சுந்தரம்" திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினர். அதன்பிறகு பல படங்களில் நடிக்க தொடங்கிய நாகேஷ் முக்கிய நடிகராக வலம் வந்தார்.
ஒரு முறை, இயக்குனர் கே.பாலசந்தர் கமலை வைத்து படம் இயக்கி வந்தார். அப்போது சில காட்சிகளுக்கு 4 அல்லது 5 டேக் சென்றுள்ளார் கமல். இதனால் கோபம் அடைந்த பாலசந்தர் "இதுவே என்னுடைய நாகேஷ் இருந்திருந்தால் ஒரே டேக்கில் முடித்திருப்பான்" என கமலை திட்டியுள்ளார்.
ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த கமல், "அந்த நாகேஷ் கையில் கிடைத்தால் தலையணை வைத்து அமுக்கி கொன்று விட வேண்டும்" என்று நினைத்து இருக்கிறார்.
அதன் பிறகு, நாகேஷுடன் கமல் இணைந்து நடிக்கும் சூழல் வந்துள்ளது. அப்போது தான் இயக்குனர் பாலசந்தர் கூறியது எவ்வளவு உண்மை என புரிந்து கொண்டார் கமல்.
96 படத்தில் நடித்த சிறுமியா இது? இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க