கே.ஜி.எப் 3 முடித்த கையோடு யாஷ் எடுத்துள்ள முடிவு இதுதான்.. என்ன தெரியுமா
நடிகர் யாஷ்
கே.ஜி.எப் படத்தின் மூலம் இந்தியளவில் பிரபலமாகியுள்ள நடிகர் யாஷ். இதன்பின் கடந்த ஆண்டு வெளிவந்த கே.ஜி.எப் 2 திரைப்படம் இந்தியளவில் மாபெரும் வசூல் சாதனையை படைத்துவிட்டது.
குறிப்பாக பாலிவுட் திரையுலகில் சுமார் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. மேலும் கே.ஜி.எப் 3 எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.
யாஷ் எடுத்துள்ள முடிவு
விரைவில் அதற்காக வேலைகள் துவங்கவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், யாஷ் பாலிவுட் திரையுலகில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கவுள்ளாராம்.
இதற்காக கதைகேட்டு முடிவு செய்துவிட்டதாகவும், நேரடி ஹிந்தி படத்தில் என்ட்ரி கொடுக்க தயாராகிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், கே.ஜி.எப் 3 படத்தை முடித்த பின் தான் பாலிவுட் படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று.
ஹாலிவுட் ஹீரோயின் போல் மாறிய தொகுப்பாளினி டிடி.. வெளிவந்த புகைப்படத்தை பாருங்க